Thursday, April 7, 2016

கொஞ்சம் கவிதைன்னு சொல்லுங்க

தாயுமானவன்

பசியடங்கிய பிள்ளையின்
புன்முறுவலில்
ஊட்டி விட்ட
அப்பா அம்மாவானான்.


உண்மை

பூத்துக்குலுங்கும் பூக்களாய்
பொய்யிலாப் புன்னகையில்!
மழலைகள்!!


அம்மா

குளித்தப்பின்
சிலுப்பி விட்ட தலையில்
நீர்த்திவலைகளை
கண்ட அம்மா
கடிந்து கொண்டே
துவட்டி விட
இன்னும் குளுமையானது.


தாம்பத்யம்

நிலா எங்கே
கேட்டான் பெயரன்
இதோ இருக்கிறது
உன் தாத்தன் தலையில்
என்றாள் கிழவி
பொங்கிய சிரிப்பில்
மிளிர்ந்தது தாம்பத்யம்.


ஆசான் என்னும் அன்னை

விம்மி விம்மி
உதடு மடித்து
கண்கள் மிரண்ட
பிள்ளையின்
கை பிடித்து
அ அம்மா
என்று
அன்போடு
சொல்லித்தந்தார்
ஆசான் என்னும் அன்னை!


இணைய காதல்

பேஸ்புக்ல் காதலித்தவளை
வாட்ஸ்அப் காரன் கொண்டு போக
இன்ஸ்டாகிராமில் பைத்தியமானவன்
கூகுளில் மீண்டும் தேடினான். 🤓

முயற்சி

கனவை விதைத்து விடு!
காலம் கை கூட்டும்!!
உழைப்பு நீர் ஊற்றி
புத்தி உரமிட்டு வா,
வெற்றிப்பழம் உனக்கே கிட்டும்!!!.

No comments: