Monday, November 4, 2013

கிழட்டுப்புலிகளும் புள்ளி மான்களும்.

கடந்த இரண்டு தினங்களாக செய்திகளில் அடிபட்டு வருவது மலையாள நடிகை ஸ்வேதாமேனன் விவகாரம். பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு மக்கள் பிரதிநிதியால் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த விசயத்தை  ஸ்வேதா மேனன் துணிச்சலோடு புகாராக தெரிவித்தது பாராட்டுக்குரியது. (அதை பின்னர் திரும்ப பெற்றுக்கொண்டது ஏற்புடையது அல்ல என்றாலும்)

அந்த கிழட்டு அரசியல்வாதிக்கு 73 வயதாம். முதலில் அறிக்கை மூலம் மறுத்தது, ஆனால் அந்த கிழட்டுப்புலி வரம்பு மீறியது ஊடகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. சுற்றி வேறு மனிதர்கள் இல்லாமல் இருந்திருந்தால் பாலியல் வன்கொடுமையே நிகழ்த்தியிருக்கும். ஐந்து லட்சம் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இப்புலிதான் இருக்கிறது. எதற்கும் சபாநாயகர் இப்புலியின் இருக்கைக்கு அருகில் மகளிர் உறுப்பினர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது.

No comments: